21. உலா வருவோம்

 101. மகனுக்கு 

         பழ மரங்கள் நட்டவர்

      தோப்பை அழித்து

        மகனை தொலைதேசம்

       அனுப்பிய பின்

       தனிமர தோப்பாய்

       இன்று


102. கொக்கொன்று பறக்கிறது

        குறி வைக்கின்றான் வேடன்

        வெள்ளை சிறகொன்று

        வந்து கொண்டிருக்கிறது

        சமாதானமாக.


103. கவிதை ஒன்றை 

      எழுதத் தொடங்கினால்

     சொற்கள் 

    ஒத்துழைக்காமல் 

   அடம் பிடித்துக் 

   கொண்டிருக்கின்றன


104,  சிரிக்கும் போது.

          ரசிக்கமுடிந்த

          வாழ்க்கையை

          துன்பத்தின் போதுதான் 

          புரிந்துகொள்ள முடியும்.


105, மாற்றம் மட்டுமே 

        மாறாதது என்றவன்

        மறந்திட்டான் 

        வாழ்க்கை முறையே

        மாறிவிட்டென்பதை மறந்து.

        

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

10. உலா வருவோம்

14.உலா வருவோம்