Posts

77. உலா வருவோம்

 381.தண்ணீரில்           தன் காதலியுடன்           நீந்தும் மீன்          கரையில் இருந்த           கன்னியின்           கயல்விழி பார்த்து           உன்னைபோன்ற          நயனம் கொண்ட          நங்கையை பார் என்றது. 382. வெற்றுத்தாளில்          பேனா முனையின் உரசலால்          பிறந்து கொண்டிருக்கின்றன         கவிதைகள்          கணக்கின்றி. 383. காழ்ப்புணர்ச்சியால்           காயப்பட்டிருந்தால்           வெளிக்காட்டிடாதே          எதிரிகள்          நினைத்ததை           சாதித்துவிட்டோம் என்று          மகிழ்வர். 384, ...

76.உலா வருவோம்

 376. சமுதாயத்துக்கு            உன்னைகுறித்து            அக்கறையில்லை            உனக்குத்தான்            சமுதாயம் குறித்து           அக்கறைவேண்டும்.. 377. தூண்டிலில் சிக்கிய மீன்          தொண்டையில் சிக்கி          பழி தீர்க்கிறது. 378.மனம்         அமைதியாய்  இருக்கிறது          கடலின்          ஆழமான பகுதியில்         அலைகள்  இருப்பதில்லை. 379. உரிய காலத்தையும்           இடத்தையும் அறிந்து விட்டால்            உலகமும்            உன் வசப்படும். 380.கண்ணுக்கு  தெரியா           மரங்களுக்கு இடையே          தனிமரத்தோப்பாய்     ...

75. உலாவருவோம்

 371. விளையும் பயிர்கள்            வரப்புகளைத்  தாண்டுவதில்லை . 372. முன்னேறு முன்னேறு          அன்று         அப்பா சொன்னதை கேட்காதவன்         இன்று        பேரூந்து நடத்துநர்       சொல்ல முன்னேறுகிறான். 373.என்னைச் சுற்றி         இன்று எவருமில்லை         நான் போலியில்லை         என்பதே காரணம். 374, அறுவடைக்கு தயாரான         நெற்கதிர்கள்         ஒன்றுக்கொண்று         முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன.         வயக்காட்டில்           விரைவில்          பிரியப்போவதை .எண்ணி.  375.நீரூற்று நதியுடன் கலப்பதும்          நதிகள் கடலுடன் கலப்பதும்         எதுவும் தனியில்லை என  உணர்த்திடவ...

74. உலா வருவோம்

 366.  விழா முடிந்து           விடை பெறுகையில்            சாப்பிட்டீர்களா என்றவரிடம்             சாப்பிட்டாச்சு என்றவன்             சாப்பிட்டீர்களா என            என கேட்க மறந்ததேன். 367. விட்டுக்கொடுப்பதும்           மன்னிப்பதும் தான் வாழ்க்கை           ஆனால்            வாழ்க்கையின் போராட்டமே           யார் விட்டுக்கொடுப்பது            யார் மன்னிப்பது என்பதுதான், 368.இலக்கியவானில்          காற்றில் மிதக்கும்          வெண் மேகமாவது          இருந்துவிட்டுப் போகிறேன். 369. என்னைப் பற்றி          எனக்கே தெரியா நிலையில்           உங்களுக்கு மட்டும்  ...

73.உலா வருவோம்

 361.. தினம்   தேய்ந்து கொண்டே இருக்கிறேனே   தனிமையில் நொந்த நிலவு    விழிகளை மூடிக்கொண்டது    இருள் எங்குமே இருள்  விழி திறந்து நோக்க   வளர்ந்து கொண்டிருந்ததது 362.மாற்றம் மட்டுமே         மாறாதது என்பவன்         மறந்து விட்டான்         வாழ்க்கை முறையே        மாறிக்கொண்டிருக்கிறது         என்பதை  மறந்து. 363.நினைவு         காக்கைகளால்         கொத்தப்பட்டு          ரணமானது          மனப்புண் 364. லஞ்சம் வாங்குவது குற்றம்          நுழைவாயிலில் கதவில் வாசகங்கள்        அதற்கும் சற்று கீழே       "தள்ளு" என்றிருந்தது         குடி மகனுக்கு வந்தது          குழப்பம். 365. அழகற்ற மனதை விட        ...

72. உலா வருவோம்

 356. உள்ளத்தில்            உள்ளதை          உள்ளபடி சொன்னால்         உடுக்கை இழந்தாலும்        உதறிடும்       உறவும்  நட்பும், 357. வற்றாத          ஜீவநதியாய்          உழைப்பாளிகளின்          வியர்வை. 358.ஊர் எலையில்         அரசமரம்        சுற்றி மேடை அமைத்த மரம்,       வெயிலுக்கு நிழல்        பஞ்சாயத்து பல செய்ய        இடம் அளித்த மரம்        வெட்டப்பட்டபோது          பஞ்சாயது செய்ய யாருமின்றி           அழுத மரம். 359, நீ இருக்கும்போது தான்           மக்களுக்கு           என் அருமை            தெரி கிறது    ...

71, உலா வருவோம்

 351. என் மனமென்னும்             கடலில்             கல்லினை வீசி விட்டர்            அது சென்றடையும்             ஆழத்தை அறியாது. 351, தண்ணீரில் வாழும்         கொழுத்த மீன்கள்        பாலில் வாழ எண்ணி         வாழ்வை இழக்கின்றன. 352. கட்டுப்பாடு         கருவிகள் ஏதுமின்றி         வலசைகள்        வானில் செல்கின்றன. 353.என்னுயிர் நின்னிடத்தில்         தேநீர் கடையில்        ஒலித்துக்கொண்டிருக்க         உயிரில்லாமல்        கேட்டுக்கொண்டிருக்கிறான், 354. வைகறையில்          மயிலிறகால்          வருடியது போல          மனம், 355.தினமும் சில        ...