Posts

Showing posts from October, 2025

4. உலா வருவோம்

 16. மலர்களை         உதிர்த்திருந்தது       செடி       அவைகளுடன்        உதிர்கிறது சருகு       நானும் வீழ்கிறேனே என. 17. சிலரை நினைத்தால்      சிரிப்பு வருகிறது      ஒரு வேளை       என்னை நினைத்தால்        அவர்களுக்கு        சிரிப்பு வரக்க்கூடும். 18.எழுத்தாளன் நான்        என்றிட்டேன்       ஆதார் இருக்கிறதா என்றார்       ஆதார் அட்டையை காட்டினேன்       ஆதார் என்றார் மீண்டும்        அந்த வட இந்தியர் 19,உனக்காகவே  பூத்திருக்கின்றேன் மலர்கள் சொல்லவில்லை  மங்கையர் சொல்லவில்லை  மனங்கள் சொல்கின்றன, 20. தவறு        தவறு தான்      நேற்று நடந்திருந்தாலும் சரி     இன்று நடந்திருந்தாலும்  சரி.

2. உலா வருவோம்

 6.அதிருப்தி      சோகம்      தோல்வி     விட்டகல    "தான்" எனும் அகந்தையை      விட்டொழி, 7. திருமணம் என்பது     சரியான துணையைத்   தேடிப்பிடிப்பது அல்ல.   கடைசிவரை சரியான துணையாக இருப்பதே. 8. புரிந்துகொண்டால்   கோபம் கூட அர்த்தம்     உள்ளதாய் தெரியும்..    புரியவில்லை என்றால்   அன்பு கூட   அர்த்தம் அற்றதாய் தெரியும். 9. காதலிக்கையில்     பொன்னென்றிட்டான்     திருமணம் என்றதும்    பொன் எவ்வளவென்றிட்டான். 10,புரிந்து நடக்க ஒரு  துணையிருந்தால்      சரிந்துவிடாமல் வாழ்ந்திடலாம்      வாழ்க்கை முழுவதும்.

36.உலா வருவோம்

 176.செல்லும் இடமெல்லாம்          வெல்லும் மனப்பாங்கு          தவறில்லை,,, ஆயின்          தோற்போர்         தோற்றுக்கொண்டே         இருக்க வேண்டுமா?         நெஞ்சே உரைத்திடு. 177, தாத்தா சொத்தை          அப்பா விற்று        அறிவாளியாய் ஆக்கினார்        அவனை.... பின்னாளில்        தனக்கு சேர வேண்டிய        சொத்தை விற்றுவிட்டார் என         நீதி மன்றத்தில்        வழக்கு தொடர்ந்தான்         அப்பாமீது, 178. மனப்புண்ணை         ஆற்றிடும்        அருமருந்து       அமைதியே, 179ஆண்பால்        பெண்பால்       பலர் பால்       பலவின் பால்       தமிழ்ப்பால் போதித்தார்   ...

34. உலா வருவோம்

 166. குளத்து நீரில்           தந்தை அருகில் இருக்க           தவளைக்கல் எறிந்தேன்           எத்தனை தந்தைகள்          மகன்களின் அருகில் 167. இரை கிடைத்ததும்         இறைவனை மனதில்        நினைத்திரு, 168.இயற்கை        முட்களின் நடுவே         மலரை வைத்ததே         மலர் கசங்கிவிடாது         இருக்கத்தான், 169, தீபம்         எண்திசையிலும்          பாகுபாடின்றி        ஒளி பரப்புகிறது. 170. உயிரின் விலையை         மருத்துவ மனைகள்         தீர்மானித்துக்         கொண்டிருக்கின்றன.