54. உலா வருவோம்

266.   அன்று 

         அப்பாவின் கோபம் 

         அம்மாவின் காது கிழிந்தது

        நேற்று கணவனின் கோபம் 

        மனையாளுக்கு முக வீக்கம் 

        இன்று 

        மகளின் கோபம் 

       நீதி மன்ற வாசல் சென்றது,


267,.  நீ 

        பார்த்துவிட்டு போன 

        என் வீட்டு கண்ணாடி 

        இப்பொழுதெல்லாம் 

        என்  முகம் காட்டுவதில்லை.

268., முடிப்பது 

        எப்படிஎன்று 

       தெரிந்து விட்டால் 

       ஆரம்பம்  தானே 

      ஆரம்பித்து விடுகிறது,


269.. பாராட்டுகள் 

        அதிகரிக்க 

       அதிகரிக்க

       கால்களை 

      மண்ணில் 

     நன்கு 

    ஊன்றிக்கொள்.

270. கூண்டிற்குள் அமர்ந்து

       எழுதிகொண்டிருக்கிறேன் 

      சிறகுகள் 

      முளைத்துக் கொண்டிருக்கின்றன.

      கூண்டைவிட்டு வெளியேற

    படபடக்கின்றன.

Comments

Popular posts from this blog

1-உலா வருவோம்

10. உலா வருவோம்

14.உலா வருவோம்