Posts

Showing posts from January, 2026

61.உலா வருவோம்

 301. அன்று           அப்பாவின் கோபம்           அம்மாவின் காது கிழிந்தது         நேற்று கணவனின் கோபம்          மனையாளுக்கு முக வீக்கம்          இன்று          மகளின் கோபம்         நீதி மன்ற வாசல் சென்றது, 302.  நீ          பார்த்துவிட்டு போன          என் வீட்டு கண்ணாடி          இன்ப்பொழுதெல்லாம்          என்  மு கம் காட்டுவதில்லை. 303, முடிப்பது          எப்படிஎன்று         தெரிந்து விட்டால்         ஆரம்பம்  தானே        ஆரம்பித்து விடுகிறது, 304. பாராட்டுகள்          அதிகரிக்க         அதிகரிக்க        கால்களை      ...

60. உலா வருவோம்

 296. காணும் பொங்கலாம்           எதைக்காண யாரைக்காண         என்றிட்டால்         உறவுகளைக் காணவாம்,       இப்போதெல்லாம்       உறவேது,,,,நட்பேது      காணும் பொங்கல்     கடற்கரையிலும்    திரையரங்குகளிலுமே   கழிந்து கொண்டிருக்கிறது. 297.சிலரை நினைத்தால்        சிரிப்பு வருகிறது       ஒரு வேளை       என்னை நினைத்தால்      அவர்களுக்கு     சிரிப்பு வரக்கூடும், 298. உனக்காகவே பூத்திருக்கிறேன்         மலர்கள் சொல்வதில்லை       மனங்கள் சொல்கின்றன, 299. கூறுபவற்றை          கேட்டுக் கொண்டிருக்கிறோம்         முடிவு நம்  கையில்தான்          சக்தி நாம்          சிவனே என்றிருக்கிறோம்        ...

59. உலா வருவோம்

 291.. வெளிச்சத்தில்            உள்ளவரையே- நீ          மதிக்கப்படுவாய்           இருளில் இருக்க வேண்டின்          உன் நிழலும் உன்னை         அணுகாது. 292. கணிமூடித்தனமான         அன்பு அவனிடம்         அவனோ அவன்         கண்மூட காத்திருந்தான். 293.சிறகடிக்கும் பறவையை       பார்த்திட பரவசம்தான்      நம் மீது எச்சமிடாத      வரையில். 294.பூக்களுக்கும் உண்டோ        கர்மவினை        ஒரே செடியில் மலர்ந்தவை       ஒன்று இறைவன் காலடியில்     ஒன்று மங்கையின் கூந்தலில்    ஒன்று அமரர் ஊர்தியில் செல்பவருடன்    ஒன்று தாயை பிரியாமல். 295, சிரித்து பேசினால்         சிறந்தவன் என்கிறது        சமுதாயம் .       ஆய...