Posts

Showing posts from February, 2026

64. உலா வருவோம்

 316, ஆயிரம் காலப்பயிர் என்          ஆயிரம் யோசித்து          ஆயிரம் நூறு கணக்கில் கொடுத்து          பத்து சத்திரம் பார்த்து         விதைத்தது           வானம் பார்த்த பூமியாய்           விவாகரத்து எனும்           வறட்சி பிடிவாதத்தால்              அழிந்தது. 317. கொதிநீரில்          பிம்பங்கள்         தெரிவதில்லை         குழம்பிய மனதில்          தீர்ப்புகள் தெரிவதில்லை          அமைதியாய் இருந்து          அணுகுவோம் சிக்கல்களை. 318. வாழ்வில்           திரும்பி கிடைக்கா          பொழுதுகள்          எவ்வளவை         தொலைத்துள்ளோம். 3...

63.உலா வருவோம்

 311. செடியில்           பூவைக்கண்டேன்          காயினைக் காணேனே         என்றிட்டான்        செடிகள்         பூத்துத்தானே காய்க்கும் என்றேன்         பூசணிக்கொடி         காய்த்துத்தானே         பூத்திடும் என்றான்         சுட்டப்பழம் வேணுமா        சுடாப்பழம் வேணுமா        என்றிட்டவனைப்  போல. 312. நாளை          நாளை என          நாளும் நகர்கிறது          நாளை எந்த          நாளை என         நாளை எதிர்நோக்கி         நாளும் நான். 313. வளரும் செடிக்கே          தண்ணீர் தேவை         மரங்கள்          தானே தேடிக்கொள்ளும். 314....

62.உலா வருவோம்

 306. ஆடை அணிகலன்          அரசனுக்கான ஒப்பனை        கலைத்த பின்னர்       மேடையின் பின்னால்       உழைப்புக் கூலிக்காக     காத்தி ருந்தான்     நாடக நடிகன், 307. கேட்டேன்          கிடைத்தது        கிடைக்கிறதே என       கேட்கவில்லை        கிடைக்கவில்லை. 308. நான்         நீ       நாம்        நமது      நாம்      நீ     நான், 309.ஐஸ் வைத்தால்       காரியம் ஆகுமாம்      யார் சொன்னது    அவன் அதுவானதும்    ஐஸ் வைக்கப்பட்டதில்  அவன் காரியம் தான்  ஆயிற்று  இவர்கள் செலவில். 310.பற்றற்றான் பற்றை        பற்றமுடியாது       கவிதையின் மீதான     பற்று தடுக்கிறது.       

41.உலா வருவோம்

201. சீந்துவாரின்றி         தெருவோரத்தில்        கிடக்கிறது சற்றே நாற்றத்துடன்        நுனியிலையாய்        நேற்று போற்றப்பட்ட         வாழையிலை. 202. தீபாக்களும்         கனகாக்களும்         ஸ்னேகாக்களும்          நாளும்          அலைபேசியில்         அந்த கடன் வேண்டுமா         இந்த கடன் வேண்டுமா         என தொல்லை          கொடுக்கின்றனர். 203. கொய்யாப்பழம் என         கொய்த பழத்தை         சொல்கிறார்கள். 204. மழை பிரமிப்புதான்          முதல் மழை என்று பார்த்தேன்          நினைவில் இல்லை         பார்க்கும் மழை எல்லாம்          முதல் மழை தான் எனக்கு, 205. முகம் பார்க்கும் கண்ணாடியை ...

29. உலா வருவோம்

 141. வாழ்க்கை வாழ்வதற்கே          என்றவனிடம்            எது வாழும் வழி என்றால்           வாழ்ந்து பார்  தெரியும்           என்றான். 142. நான்         திமிரானவனாய்         தெரியலாம்         உங்கள் கண்களுக்கு         மாற வேண்டியது         நானல்ல          உங்கள் கண்ணோட்டமே. 143. 6. வெடித்து சிதறின          வெடிகளின் ஓசை         அதில்        அதை தயாரித்த        குட்டிக் கரங்களின்       விசும்பல் ஓசை       அடங்கிப் போயிற்று. 144. பிஞ்சுக் கைகளில்           பிடிக்கு அடங்கா மூங்கில்          பஞ்சு பாதங்களை          பதம் பார்க்கும் கயிறு     ...