68. உலா வருவோம்
336. கல் எனஎண்ணினேன்
கசிவு தெரிந்தது
ஓரத்தில்.
337. கவிதை ஒன்றை
எழுத தொடங்கினால்
சொற்கள் ஒத்துழைக்காமல்
அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றன.
338. உன்னைப்பற்றி நீயே
உயர்வாய் எண்ணுவ்து
உன் கண்ணில் விழும் தூசி போல
உறுத்திக் கொண்டே இருக்கும்
உள்ளவரை..
338. ஆணவத்தால்
அகங்காரத்தால்
காழ்ப்புணர்ச்சியில்
சாதிக்க முடியாததை
சாதித்திடலாம் அன்பினால்.
339,அளவுக்கு மீறிய நிதானம்
அளவுக்கு மீறிய அவசரம்
முடிவு....
தோல்வியே,,,
340, முதிர் கன்னியாய்
நாட் குறிப்பு
பக்கங்கள்.
Comments
Post a Comment