Posts

Showing posts from June, 2026

84. உலா வருவோம்

 416, வெள்ளைத்தாளில்           வரைந்திட்டேன்            பறவை ஒன்றினை            பறக்காமல் அமர்ந்திருக்கிறது            சிறகு வரைய மறந்ததால். 417, பழுத்த இலை விழுந்து           துளிரும் இலைக்கு          வழி விட்டது, 418, சரியானதை           சரியான நேரத்தில்          சரியாகச்செய்தால்        சரியாக         பறித்திடலாம்        வெற்றிக்கனியை. 419. உன்னிடம்          இருப்பது         இறைவன் கொடுத்தது         இல்லாதது         இறைவன் கொடுக்கப்போவது. 420. மலையின் உச்சியில்  நின்றால்         மலையும் உன்னை விட          உயரம் குறைவு தான்.       ...

83, உலா வருவோம்

 411. எதிரே வந்தவர்           புன்னகைத்தார்           நானும்           புன்னகைத்தேன்            புன்னகைதானே           அன்பிற்கான தொடக்கம். 412. மனதை அமைதிப்படுத்து           மனக்காயங்கள் ஆறிட            மருந்து அது ஒன்றே. 413.சிரிக்கும் காந்தியைக் கொடுத்து        சில்லறைகளுடன்         சிந்தை மயங்கி         சிரித்துக் கிடக்கிறான்       குடிமகன். 414. முதியோர் இல்லத்தில்           மரணித்த தாய்க்கு          வீட்டில் திதி கொடுத்தான்         மகன், 415. நாட்டில்          நல்லவன் யார்         கெட்டவன் யார்         தீர்மானிக்கிறது         சூழ்நிலை.

82. உலா வருவோம்

 406. பிடிவாதங்கள் தளர்ந்து           காலத்தின் போக்கில்          கரைந்து கொண்டிருக்கிறேன்          எதிர்பார்ப்புகள்           ஏதுமின்றி. 407,கடற்கரை மணலில்          பாதச்சுவ்டுகள்          குவிந்து கிடைக்கின்றன            மாறும் தன்மையிலும்           மாறாதவைகளாக, 408. அநீதியைக் கண்டு          மனம் கொந்தளித்தாலும்          மௌனமாய் இருந்திடு          என் கிறது வயது. 409.இறுதிச் சடங்கில்         முதன் முதல் பார்த்த         அழகிய முகம்         நினைவில் வந்து தொலைக்கிறது, 410.வயது ஆக ஆக         விலகுகின்றனர் நண்பர்கள்         வயது           அவர்களுக்கும்...