Posts

Showing posts from May, 2026

81. உலா வருவோம்

 401. அதிகம் துள்ளும்           மீன்கள் தான்           அதிகமாக வலையில்            சிக்குகின்றன. 402. எல்லாம் தெரியும்           என்கிறான்         ஏதும்  தெரியாதவன். 403. எழுத்தில் பிழையிருப்பினும்          ஏற்றுக் கொள்கிறது         இணையதளமென்னும்         சங்கபலகை. 404. இரைச்சல் தாங்கவில்லை           மௌனமே              மௌனம் ஏன் இன்னும்.? 405, ஓய்வூதியம் தொடர்ந்திட          உயிர் வாழ் சான்றிதழ்          கொடுத்து திரும்பினேன்          விண்ணிலிருந்து          இறைவன் பார்த்திருக்ககூடும்.  .     

80, உலா வருவோம்

 396. இழுப்பதா          தள்ளுவதா.....          தள்ளுவதா           இழுப்பதா         இந்த சந்தேகம்          இருந்துகொண்டுதான்          இருக்கின்றது          எல்லோருக்கும்          எப்போதும். 397. ஒன்றை பெற்றும்          ஒன்றை இழந்தும்          நகர்ந்துகொண்டிருக்கின்றன          நாட்கள்,  398.ஆரம்ப சிக்கலை          அறிந்துகொண்டு விட்டால்         அடுத்தடுத்ததை        சமாளித்து விடலாம். 399. படித்த புத்திசாலிகளுடன்          வாழ்வதை விட          படிக்காத முட்டாள்களுடன்          வாழ்வதே நன்று. 400. சித்திரை நிலவு           இத்தரையில் விழ ...

79. உலா வருவோம்

 391. இலக்கு இன்றி போனாலும்            இலக்கு ஒன்றை எட்டுவதே           இலக்கு எனக்கு, 392. உடல் ஓய்வு வேண்டுகிறது          மனமோ         நேரத்தை வீணாக்காதே          என்கிறது. 392, கிடைத்ததைக் கொண்டு           மகிழ்ச்சியடை           எது  உனக்கு கிடைத்ததோ           அதன் மதிப்பை           அறியாய் இன்று  நீ....           அதை  இழந்த பின்னரே           உணர்வாய் நாளை. 393. ஒவ்வொரு கல்லாய் பார்த்து           கட்டின இல்லத்தின்            வரவேற்பறையில் படுத்து இருக்கிறான்              வீட்டில்            அதிக நேரம் கூடாது          எடுத்து விடுங்கள்  ...

78.உலா வருவோம்

 386. சூல்கொண்ட மேகம்            பிரசவிக்க துடிக்கின்றது            வாயு பகவானோ            காற்றினை சில்லென வீசாது              வேடிக்கை பார்க்கின்றான், 387, சொல்லாத சொல்லிற்கு          நீ முதலாளி          உமிழ்ந்துவிட்ட சொற்களுக்கு           அது முதலாளி. 388, கூட்டைப் பிளந்து          பறக்க துடிக்கும்           பட்டாம் பூச்சியாய்          கூட்டுப்புழுவான நான். 389. இரண்டு நாட்களாக          மக்களை            வறுத்து எடுத்துவிட்டாய் என             வருண பகவான்             கதிரவனை             அடக்கி வைத்துள்ளானோ          ...

77. உலா வருவோம்

 381.தண்ணீரில்           தன் காதலியுடன்           நீந்தும் மீன்          கரையில் இருந்த           கன்னியின்           கயல்விழி பார்த்து           உன்னைபோன்ற          நயனம் கொண்ட          நங்கையை பார் என்றது. 382. வெற்றுத்தாளில்          பேனா முனையின் உரசலால்          பிறந்து கொண்டிருக்கின்றன         கவிதைகள்          கணக்கின்றி. 383. காழ்ப்புணர்ச்சியால்           காயப்பட்டிருந்தால்           வெளிக்காட்டிடாதே          எதிரிகள்          நினைத்ததை           சாதித்துவிட்டோம் என்று          மகிழ்வர். 384, ...

76.உலா வருவோம்

 376. சமுதாயத்துக்கு            உன்னைகுறித்து            அக்கறையில்லை            உனக்குத்தான்            சமுதாயம் குறித்து           அக்கறைவேண்டும்.. 377. தூண்டிலில் சிக்கிய மீன்          தொண்டையில் சிக்கி          பழி தீர்க்கிறது. 378.மனம்         அமைதியாய்  இருக்கிறது          கடலின்          ஆழமான பகுதியில்         அலைகள்  இருப்பதில்லை. 379. உரிய காலத்தையும்           இடத்தையும் அறிந்து விட்டால்            உலகமும்            உன் வசப்படும். 380.கண்ணுக்கு  தெரியா           மரங்களுக்கு இடையே          தனிமரத்தோப்பாய்     ...

75. உலாவருவோம்

 371. விளையும் பயிர்கள்            வரப்புகளைத்  தாண்டுவதில்லை . 372. முன்னேறு முன்னேறு          அன்று         அப்பா சொன்னதை கேட்காதவன்         இன்று        பேரூந்து நடத்துநர்       சொல்ல முன்னேறுகிறான். 373.என்னைச் சுற்றி         இன்று எவருமில்லை         நான் போலியில்லை         என்பதே காரணம். 374, அறுவடைக்கு தயாரான         நெற்கதிர்கள்         ஒன்றுக்கொண்று         முத்தமிட்டுக்கொண்டிருக்கின்றன.         வயக்காட்டில்           விரைவில்          பிரியப்போவதை .எண்ணி.  375.நீரூற்று நதியுடன் கலப்பதும்          நதிகள் கடலுடன் கலப்பதும்         எதுவும் தனியில்லை என  உணர்த்திடவ...

74. உலா வருவோம்

 366.  விழா முடிந்து           விடை பெறுகையில்            சாப்பிட்டீர்களா என்றவரிடம்             சாப்பிட்டாச்சு என்றவன்             சாப்பிட்டீர்களா என            என கேட்க மறந்ததேன். 367. விட்டுக்கொடுப்பதும்           மன்னிப்பதும் தான் வாழ்க்கை           ஆனால்            வாழ்க்கையின் போராட்டமே           யார் விட்டுக்கொடுப்பது            யார் மன்னிப்பது என்பதுதான், 368.இலக்கியவானில்          காற்றில் மிதக்கும்          வெண் மேகமாவது          இருந்துவிட்டுப் போகிறேன். 369. என்னைப் பற்றி          எனக்கே தெரியா நிலையில்           உங்களுக்கு மட்டும்  ...