Posts

Showing posts from April, 2026

73.உலா வருவோம்

 361.. தினம்   தேய்ந்து கொண்டே இருக்கிறேனே   தனிமையில் நொந்த நிலவு    விழிகளை மூடிக்கொண்டது    இருள் எங்குமே இருள்  விழி திறந்து நோக்க   வளர்ந்து கொண்டிருந்ததது 362.மாற்றம் மட்டுமே         மாறாதது என்பவன்         மறந்து விட்டான்         வாழ்க்கை முறையே        மாறிக்கொண்டிருக்கிறது         என்பதை  மறந்து. 363.நினைவு         காக்கைகளால்         கொத்தப்பட்டு          ரணமானது          மனப்புண் 364. லஞ்சம் வாங்குவது குற்றம்          நுழைவாயிலில் கதவில் வாசகங்கள்        அதற்கும் சற்று கீழே       "தள்ளு" என்றிருந்தது         குடி மகனுக்கு வந்தது          குழப்பம். 365. அழகற்ற மனதை விட        ...

72. உலா வருவோம்

 356. உள்ளத்தில்            உள்ளதை          உள்ளபடி சொன்னால்         உடுக்கை இழந்தாலும்        உதறிடும்       உறவும்  நட்பும், 357. வற்றாத          ஜீவநதியாய்          உழைப்பாளிகளின்          வியர்வை. 358.ஊர் எலையில்         அரசமரம்        சுற்றி மேடை அமைத்த மரம்,       வெயிலுக்கு நிழல்        பஞ்சாயத்து பல செய்ய        இடம் அளித்த மரம்        வெட்டப்பட்டபோது          பஞ்சாயது செய்ய யாருமின்றி           அழுத மரம். 359, நீ இருக்கும்போது தான்           மக்களுக்கு           என் அருமை            தெரி கிறது    ...

71, உலா வருவோம்

 351. என் மனமென்னும்             கடலில்             கல்லினை வீசி விட்டர்            அது சென்றடையும்             ஆழத்தை அறியாது. 351, தண்ணீரில் வாழும்         கொழுத்த மீன்கள்        பாலில் வாழ எண்ணி         வாழ்வை இழக்கின்றன. 352. கட்டுப்பாடு         கருவிகள் ஏதுமின்றி         வலசைகள்        வானில் செல்கின்றன. 353.என்னுயிர் நின்னிடத்தில்         தேநீர் கடையில்        ஒலித்துக்கொண்டிருக்க         உயிரில்லாமல்        கேட்டுக்கொண்டிருக்கிறான், 354. வைகறையில்          மயிலிறகால்          வருடியது போல          மனம், 355.தினமும் சில        ...

70, உலா வருவோம்

 346. பென்சில் செய்யும்            தவறெல்லாம்            அழிக்கும் அழிப்பானுக்கு             இணையுண்டோ            எத்தியாகமேனும். 347. கவிஞன்          கவிதைகளைக் கொட்டினான்          கூறாக்கினான்          கூவினான்          கொள்வாருமில்லை          கொடுப்பருமில்லை. 348, நம்பி நம்பி           நாள்தோறும் ஏமாந்தாலும்           நம்பாமல்           இருக்க முடியவில்லை          நானிலத்தில். 349, வெற்றிடங்கள் என்பது          வெற்றி இடங்கள்          வென்றிட தேவை            மக்கள் உள்ளங்கள், 350, கூண்டுக்குள் நான்           சிறித...