85 உலா வருவோம்
421.கடல் நீரை குடி நீராக்கி
மேகப்பைகளில்
அடைத்து அனுப்புகிறது
இயற்கை நமக்கு
ஜி,ஸ்,டி, இல்லாமல்.
422. பூ மலர்ந்ததும்
வண்டொன்று
வலம் வருகிறது
அதனை ரீங்காரமிட்டவாறே,
423. வாழ்வில்
மகிழ்ச்சி
துக்கம்
பயம்
கோபம்
வெற்றி
தோல்வி
ஆகியவையே
வலிமையாக்கிடும் உன்னை.
424. முயற்சி செய்
விடாது முயற்சி செய்
உன் இலக்கினை
நீ அடையும் வரை .
425, இரை கிடைத்தபின்
இறைவனை
இயற்கையை
மனதில் துதித்திடு,
Comments
Post a Comment