Posts

Showing posts from November, 2025

31. உலா வருவோம்

 151. குளத்தில் நீர் அசையாமல்           நிலவில் பிம்பத்துடன்            காதலில்           கல்லொன்று எறியப்பட்டு           சிதைகிறது காதல். 152. மனதை அமைதிப்படுத்து          மனக் காயங்கள் ஆறிட          மருந்து அது ஒன்றே. 153. மனித முகங்களின்         முகமூடியை கழட்ட முடிந்தால்        முகங்கள் பல இருப்பதை        பார்த்திடலாம், 154.வல்லவனுக்கு         வல்லவனும் உண்டு         உணராதவனை         காலம்        காலடியில் போட்டு        நசுக்கிவிடும் 155. அப்பா......         நீ பார்க்க          அழமாட்டேன்          என் கண்களுக்கு         கண்ணீரை விழுங்கத்தெரியும்.

49.உலா வருவோம்

 241. வெள்ளைத்தாளை தாவி எடுத்ததும்           சொற்கள் வந்து விழுகின்றன.          பொருள்கள் பிறக்கின்றன         காணும் காட்சி யாவும்         கவிதையாய் அமைகின்றன. 242. அடர்ந்த மர நிழலில்          அமர்ந்துள்ளவன் மீது          கிளைகள் அசைகையில்        இடுக்குகள் வழியே        வெயில் விழத்தான் செய்கிறது, 243. எப்படி இருக்கீங்க          என் கேட்பவர்கள்         அனைவரும்          நீங்க எப்படி இருக்கீங்க          எனும் பதிலையே         எதிபார்க்கின்றனர். 244.நான் சாதியம் பார்ப்பதில்லை          என்றிட்டான்         சாதி சான்றிதழை          பார்க்காதது போல பார்த்த         நேர்முகத் தேர்வாளன், 245. அகல் வி...

28. உலா வ்ருவோம்

 136.உயிர் மெய் எழுத்தென்ன என           கேட்டதும் சொன்னது          காகம். 137. கண்மூடித்தனமாக          யாரையும் நம்பாதீர்கள்         கண் மூட முடியாமல்          போகக்கூடும்.  138, வயது ஆக அக           நண்பர்களும் விலகுகின்றனர்         அவர்களுக்கும்          வயதாகிறதல்லவா? 139. இலக்கின்றி போனாலும்         இலக்கொன்றை எட்டுவதே         என் இலக்கு. 140.நேரத்துக்கு நேரம்          நிறம் மாறும்         பச்சோந்திகளாய் சிலர்,

48. உலா வருவோம்

 236. வாசமுடன்  மொட்டொன்று வளர்ந்து மலராகியது சூடுவாரின்றி பிறவிப்பயன் பெறாது உலர்ந்து-உதிர்ந்து   மீண்டு நம்பிக்கையுடன்  மொட்டாய் வளர்ந்து எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. 237. ஓடுமீன் ஓட         உறுமீன் வர        காத்திருந்தது கொக்கு       பார்வை இல்லை        என்பதை  மறந்து      பூனையோ      தன் கண்மூடி      உலகமே இருள்      என்றது. 238. மழை          குளிப்பாட்டிவிட்டதும்         வெயில் வந்து         துவட்டி விட்டதும்         மர இலைகளில்        பளிச்சிடுகிறது           ஆரோக்கிய பசுமை 239. வருவது போல         போக்குக் காட்டி         வராமல் நகர்ந்திடும்         கார் மேகமாய்       ...

47. உலா வருவோம்

 231. ஓய்வெடுக்கையில்           அழகாய் வந்து          அமர்கிறது           சொற்கள்          நினைவடுக்கைகளில்          எழுதுகோலை எடுக்கையில்          எங்கோ         காணாமல்         போய்விடுகின்றன 232. வியர்வை முத்த         சிந்தி விவசாயி        விளைவித்த        நெல் முத்துகள்       பண்ணை வீட்டு பத்தாயத்தில். 233. எத்தனையோ          எண்ணங்கள்        அத்தனையும் சொன்னால்        அவனிதனில் பொல்லாப்பு        ரௌத்திரம் பழகினாலும்       எண்களை எண்ணியே      என் காலம் செல்கிறது, 234. மரங்கள்          வெட்டப்படுகின்றன        காரணம்    ...

46. உலா வருவோம்

 226. மணம் செய்து கொள்ள         விருப்பம் தான்          தாய் தந்தை இல்லா         எவரேனும் இருந்தால்       என்கிறாள் புதுமைப்பெண். 227. நேரம் இல்லை என்பவன்         நாளும் இதையே சொல்வான்          வாய்ப்பு இல்லை என்பவன்         வாளாய் இருந்துபேசுவான்.  228.தூண்டிலுக்கு தப்பியது வலைக்கு தப்பியது நீர் வற்றியதால்  மரணத்துக்கு தப்பவில்லை, 229,பௌர்ணமி இரவு        தெளிந்த  நீரோடை         கரையில் அவள்        நீரில் நிலவுகள்         களங்கத்துடன் ஒன்று          களங்கமின்றி ஒன்று. 230, விடியலில்          நடைப் பயிற்சி         பைரவர்கள்        பலர்        பாதுகாப்புடன் .

45. உலா வருவோம்

 221. கண்கள்          கண்ணீரால் சாதிக்கும்         நீல நயனங்கள்         தூண்டில் போடும்         கவர்ந்திழுக்கும்         கதை பேசும்        கவிபாடும்        மனதைக் கவ்வி         நவரசம் காட்டும்         அகத்தின் அழகு முகத்தில்        முகத்தின் அழகோ       கண்களில். 222.தான் மதிப்பு மிக்கவன்         என         ஆணவத்தால்         வெளிவராதவன்         குப்பையிலும்         சாக்கடையிலும்         சீந்துவாரின்றி         கிடக்கிறான்          மனித வாழ்வு          இதுதான் என . 223, கொக்கொன்று பறக்கிற்து          குறிவைக்கிறான் வேட...

44. உலா வருவோம்

 216. காசை கரியாக்குகிறான்            என பட்டாசு வெடிக்கும் மகனை           திட்டியபடியே            கரியை தணலாக்கி             சலவை  பெட்டியில் இட்டு            துணிகளில் தேய்த்து           காசாக்குகிறான்          சலவைத்தொழிலாளி. 217. இப்போதெல்லாம்          உள்ளம் சொல்வதை         உதடுகள் சொல்வதில்லை         பலருக்கு, 218, விடியலில் மலர்ந்து         மாலையில் மறைந்தாலும்          இருக்கும் வரை மணம் வீசும்         மலருக்குத்தான்        எவ்வளவு மகிழ்ச்சி       தன் வாழ்நாளை எண்ணி. 219.வாழ்க்கையில்         வேகத்தடைகள்        எவ்வளவு வந்தாலும்    ...

13. உலா வருவோம்

 61.நியாயம்வேண்டி       போராடி  போராடி      அநியாயத்துக்கு      இளைத்து  விட்டான் 62.எந்த சாதியில் பிறக்கவேண்டும்       எனும் விருப்பம்       உன்னிடம் இல்லாதபோது       அதை வைத்து      ஆர்ப்பாட்டங்கள் ஏன்? 63. இதனை       இதனால்        இன்று முடித்திடுவேன் என       செயலில் ஈடுபடுங்கள்       அனுதினமும்        புதிதாய் பிறந்திடிடுவீர்.. 64.தேனீ தேனிசைப்பாடி       தேனினை அருந்தி        மலர்களை விட்டு        மறைகின்றன. 65. புகழ்ச்சி கண்டு         மயங்காதே        பின்னால்         வந்துகொண்டிருக்கிறது        இகழ்ச்சி,      

11. உலா வருவோம்

 51, எலியை பிடிக்கும்        எலிப்பொறி        எலிகளை சுற்றுவதில்லை       எலிகள் தானேதேடி வந்து      சிக்கிக் கொண்டிருக்கின்றன. 52.உலகு நீரின்றி அமையாது       பெண்ணின்றி இயங்காது       அனைவருக்கும்        மகளிர் தின வாழ்த்துகள். 53, சம்மதத்திற்கும்        தர்க்கம் தவிர்க்கவும்       மௌனமே        மௌனமாய்         அமர்கிறது. 54.உன்னால்        இயலாததை       மற்றவன் செய்வானாயின்       அவனை        போற்றவேண்டாம்       இகழாமல்  இருந்திடு        அது போதும் 55. மழையை ரசிப்பது ஆனந்தம்         என்றால்        மழையில் நனைவது        பேரானந்தம் தனே.       .     

10. உலா வருவோம்

 46. தேய்ந்து தான் கொண்டிருக்கிறது          நிலவு வளர்பிறை நோக்கி. 47.கா..கா..      கரைந்தது       காகம் ஒன்று      அரும் பசி போலும்      அன்னம் சற்று இட்டதும்      சற்றே தொனி மாற்றி      கா. கா.. என்றது      அதன் மொழியில்       நன்றி சொல்கிறதோ! 48.  முதலும் முடிவும் தெரியா        சிக்கல் விழுந்த நூல்கண்டாய்        வாழ்க்கை. 49.போகும் ஊருக்கு       வழியைக் கேட்டால்       போகாத ஊருக்கு       வழியை சொல்கிறார்கள்       அதனால் என்ன        போகாத ஊருக்கும்        ஒருநாள் போகவேண்டியதுதானே. 50. தளர்ந்த நிலையிலும்        விரல் நீட்டும்       விழுதுகளை நினைப்பதில்லை       நாணலை நம்பி       நர்த்தனம் ஆடுவோர்,        ...

9. உலா வருவோம்

 41.வறுமை இல்லா        முதுமை       முழுமை தான். 42, உறங்குகையில்        தாழ்ந்த ......இமைகளை       மயிலிறகு போல என்றிட்டான்      கவி ஒருவன்     கவிதைக்கு உண்மையும்    அழகு தான். 43. சனியனே.....       எங்கே போனே?       குழந்தையை.....திட்டியபடியே        நவக்கிரகம் சுற்றுகிறாள்        சனி பார்வை விலக         ஒரு அன்னை, 44. விடியலின்        பனித்துளிகள்        போதையில்         மலர்கள். 45. விரிந்த சிறகுகளுடன்        விண்ணில் பறவை ஒன்று       இலக்கு நோக்கி......       விரிக்க சிறகின்றி       இலக்கில்லாமல் மண்ணில்       நான்.   

43.உலா வருவோம்

 211.. கரையயோரம்  வாழ்பவன்           கரையேறத் தெரியாத           கரையோரம் ஒதுங்கியவனை           கரையேற்றி வைத்தான், 212.   தேங்கியிருக்கும்          நீரில்          பேரூந்தில் இருந்து          டீசல் சிந்தி         தரையில் வானவில்.  213. இந்து என்றும்          இஸ்லாமியர்  என்றும்          கிறிஸ்துவர் என்றும்          ஏனிங்கே பல மதங்கள்?          மனிதன் என்றே இணைவோம்          மனிதநேயம் காப்போம்            முழங்கினவன் கட்சி கூட்டத்தில்           அன்றுதான் இணைந்தவன்           பின்னால் அமர்ந்திருந்த தலைவர் கேட்டார்           பேசுபவன் என்ன ஜாதி என்று. 214. நான் இருக்கிறேன...